பாடசாலை சென்ற மாணவி மாமனாருடன் தலைமறைவு!!

578

Missing

பொகவந்தலாவ ரானிகாடு தோட்டத்தில் 14 வயது பாடசாலை சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்து சென்ற மாமனாரும், குறித்த சிறுமியும் தலைமறைவாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் நேற்று (01) வியாழகிழமை பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வியாழகிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

குறித்த மாணவி நேற்று காலை 07.45 மணி அளவில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி சென்றுள்ளதை மற்றொரு மாணவி கண்டிருப்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரிய வந்துள்ளது.

சிறுமியின் மாமனார் கண்டி கலகா பகுதியை சேர்ந்தவர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த மாணவி பொகவந்தலாவயில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09ல் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கபடுகிறது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் மாமனாரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.