திரைக்கு வரும் முன்பே 6 சர்வதேச விருதுகளை வென்ற தமிழ் திரைப்படம்!!

669

1

வெளி­வ­ரு­வ­தற்கு முன்பே 6 சர்­வ­தேச விரு­து­களை தமிழ் படம் ஒன்று வாங்கிக் குவித்­துள்­ளது.

அருண் சிதம்­பரம் கதை, திரைக்­கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, கதா­நா­ய­க­னா­கவும் நடித்துள்ள படம் ‘கனவு வாரியம்’. இவர் ‘ஆண­ழகன்’ சிதம்­ப­ரத்தின் இளைய மகன். கடந்த நாற்­பது ஆண்­டு­க­ளாக உடற்­ப­யிற்சி கலையில் வல்­லு­ன­ராக திகழும் ‘ஆண­ழகன்’ டாக்டர். அ.சிதம்­பரம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உட்­பட தமி­ழ­கத்தின் பல பிர­ப­லங்­க­ளுக்கு உடற்­ப­யிற்சி ஆலோசகராக இருந்­தவர்.

அருண் சிதம்­பரம் அமெ­ரிக்­காவில் தனது மேற்­ப­டிப்பை (MS) முடித்­து­விட்டு புகழ்­பெற்ற வங்­கி­யான ‘ஜே பி மார்கன் சேஸில்’ (சிகா­கோவில்) பணி­பு­ரிந்தார். அருண் சிதம்­பரம், இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாமால் பெரிதும் பாராட்­டப்­பட்­டவர். இவரும், கார்த்திக் சிதம்பரமும் இணைந்து ‘டிசிகாப் சினிமாஸ் (DCKAP CINEMAS) பேனரில் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை தயா­ரித்­துள்­ளனர்.

தமி­ழக கிரா­மங்­களில் நில­விய மின்­வெட்டு பிரச்­சினையை மைய­மாக கொண்டு குழந்­தைகள் கொண்­டாடும் வகையில் பட­மாக்­கப்­பட்ட கமர்­ஷியல் திரைப்­படம் ‘கனவு வாரியம்’, ஜுன் 11 முதல் 19 வரை சீனாவில் நடை­பெற்ற 19 ஆவது ஷாங்காய் சர்­வ­தேச திரைப்­பட விழாவில் ரசி­கர்­களின் பேரா­த­ர­வுடன் 4 அரங்கு நிறைந்த காட்­சிகள் திரை­யி­டப்­பட்­டது.

பின்னர், ஜூலை 26 முதல் 30 வரை கொரி­யாவின் பூசான் சினிமா ஹோலில் நடை­பெற்ற ‘ஏசியன் நியூ மீடியா’ திரைப்­பட விழா­விற்கு தெரி வானது. விழா குழு­வி­னரால் இயக்­குநர் அருண் சிதம்­பரம் தென் கொரியா அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.

தற்­போது ஓகஸ்ட் 24 முதல் 28 வரை ரஷ்­யாவில் நடை­பெறும் ‘இண்டர் நெஷனல் மோட்டிவேஷ்னல் ஃபிலிம் ஃபெஸ்­டிவல் BRIDGE OF ARTS’ திரைப்­பட விழாவில் திரை­யிட தெரிவாகியிருந்தது. இத்­தி­ரைப்­பட விழாவில் பங்­கேற்க இயக்­குநர் அருண் சிதம்­பரம் ரஷ்யா சென்றுள்ளார்.

மேலும் ‘கனவு வாரியம்’ திரைப்­படம் செப்டெம்பர் 16 முதல் 23 வரை வட கொரி­யாவில் நடைபெறும் ’15 ஆவது பியாங்யாங் சர்­வ­தேச திரைப்­பட விழா­விலும்’, செப்­டெம்பர் 21 முதல் 24 வரை உக்­ரைனில் நடை­பெறும் ‘சர்­வ­தேச குழந்­தைகள் திரைப்­பட விழா­விலும்’, ஒக்­டோபர் 6 முதல் 9 வரை இத்­தா­லியில் நடை­பெறும் ’67 ஆவது மோண்­டி­கேட்­டினி திரைப்­பட விழா­விலும்’, டிசம்பர் மாதம் கென்­யாவில் நடை­பெறும் ’11ஆவது லோலா கென்யா திரைப்­பட விழா­விலும்’ திரை­யிட தெரி­வா­கி­யுள்­ளது.

இது­வரை ‘கனவு வாரியம்’ திரைப்­படம் 6 சர்­வ­தேச விரு­து­க­ளையும் 8 நாடு­களின் அங்கீகாரங்களையும் வென்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

‘கனவு வாரியம்’ திரைப்­படம் வென்ற விரு­துகள் வரு­மாறு,
அமெ­ரிக்­காவின் ஹூஸ்டன் நகரில் நடை­பெற்ற 49 ஆவது வேர்ல்ட் ஃபெஸ்ட் சர்­வ­தேச திரைப்­பட விழாவில்,சிறந்த திரைப்­ப­டத்­திற்­கான உலகப் புகழ் பெற்ற ‘பிளாட்­டினம் ரெமி’ விருது

இத்­தி­ரைப்­ப­டத்தில் இடம்­பெற்­றுள்ள ‘கல்லா மண்ணா’ என்ற பாடல் சிறந்த குழந்­தைகள் பாட­லுக்­கான ‘சில்வர் (வெள்ளி) ரெமி’ விருது

49வது வேர்ல்ட் பெஸ்ட் சர்­வ­தேச திரைப்­பட விழாவில் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு மிகவும் பிடித்த படத்­திற்­கான விருது

அமெ­ரிக்­காவின் ஒக்­ல­ஹோமா மாகா­ணத்தில் ‘17 ஆவது பேர் போன்ஸ் சர்­வ­தேச திரைப்­பட விழா’வில் விருது

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை­பெற்ற ‘லொஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் & ஸ்கிரிப்ட் திரைப்­பட விழா’வில் விருது

மத்­திய அரசால் நடத்­தப்­படும் ‘தேசிய அறி­வியல் திரைப்­பட விழா’வில் (National Science Film Festival) சிறப்பு விருது

திரையிடப்பட்ட மேலை நாடுகளில் எல்லாம் மக்களின் ஏகோபித்த ஆதரவையும் குழந்தைகளின் பாராட்டையும் பெற்றுள்ளது. ‘கனவு வாரியம்’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் விரைவில் வெளிவருகிறது.

2 3 4