என் அம்மா சிவகார்த்திகேயன் ரசிகை : கீர்த்தி சுரேஸ்!!

440

Keerthi

தனு­ஷுடன் ‘தொடரி’, சிவ­கார்த்­தி­கே­ய­னுடன் ‘ரெமோ’, பாபி­சிம்­ஹா­வுடன் ‘பாம்­புச்­சட்டை’…இவை எல்­லா­வற்­றையும் விட விஜய் படத்தின் அடுத்த நாயகி என்று இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷின் ஆண்டு. குஷி­யாக, பிஸி­யாக இருக்கும் கீர்த்தி சுரே­ஷுடன் பேசியபோது,

எப்­படி ஃபீல் பண்­ணு­றீங்க?
“இதென்ன கேள்வி? ஐ ஆம் த ஹேப்­பியஸ்ட் வுமன் ஆன் எர்த். சின்ன வய­சு­லேயே ஹீரோயின் ஆக­ணுங்­கி­ற­துதான் ஆசை, இலட்­சியம் எல்லாம். அப்பா சுரேஷ்­குமார், மலை­யா­ளத்தில் நிறையப் படங்கள் தயா­ரிச்­சவர்.

அம்மா மேன­காவை உங்­க­ளுக்கே தெரியும். எண்­ப­து­களில் தமி­ழிலும் மிகவும் பிர­ப­ல­மான நடிகை.

என்­னோட அப்பா தயா­ரிச்ச ‘பைலட்ஸ்’, ‘அச்­ச­ன­யானு எனிக்கு இஷ்டம்’, ‘குபேரன்’ போன்ற படங்­களில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடிச்சேன். ஹீரோ­யினா என்­னோட முதல் படமே மிகவும் பிரம்­மாண்­ட­மான என்ட்ரி தெரி­யுமா?

அப்­ப­டியா? அப்­ப­டி­யென்ன படம்?
ஹீரோ­யினா நான் நடிச்ச முதல் படத்­தி­லேயே ரெட்டை வேடம்தான். படம் பேரு ‘கீதாஞ்­சலி’. பிரி­யர்­தர்ஷன் டைரக்‌ஷன். மோகன்லால் ‘மணி­சித்­தி­ரத்தாள்’ படத்தில் நடிச்ச அதே கெரக்­டரில் இந்தப் படத்தில் வந்து கலக்­கி­னாரு.

2013 இல் ரிலீஸ் ஆச்சி. அகதா கிறிஸ்­டி­யோட நாவல் இன்ஸ்­பி­ரே­ஷனில் உரு­வான படம் அது.

நீங்க சிவ­கார்த்­தி­கே­ய­னோட ரசி­கையா?
என்ன அர்த்­தத்­துல கேட்­கு­றீங்­கன்னு தெரி­யலை. நானும், சிவாவும் தமிழ் சினி­மாவில் ராசி­யான ஜோடி­யா­யிட்டோம். எக்­சு­வலா எங்­கம்­மாதான் சிவ­கார்த்­தி­கே­ய­னு­டைய தீவிர ரசிகை.

‘ரஜி­னி­மு­ருகன்’, ‘ரெமோ’ன்னு அடுத்­த­டுத்து அவ­ரோட நான் நடிக்­கி­றது எங்­கம்­மா­வுக்கு மிகவும் சந்­தோஷம். ஷூட்­டிங்கில் நான் எப்­படி வேர்க் பண்­ணி­னேன்னு கேட்­கு­ற­தை­விட, “சிவா எப்­படி பண்­ணு­றாரு? அடுத்து என்­ன­வெல்லாம் படம் செய்யப் போறாரு?”ன்னு அவரைப் பத்­தி­யேதான் ஆர்­வத்­தோட விசா­ரிச்­சிக்­கிட்­டி­ருப்­பாங்க.

விஜய்­யோட நடிக்­க­றீங்க…
சத்­தி­யமா இதை நான் எதிர்­பார்க்­கவே இல்லை. ‘போக்­கிரி’ வெற்­றி­வி­ழா­வுக்­காக அவரு திருவனந்­த­புரம் வந்­தப்போ கூட்­டத்­தோட கூட்­டமா நின்னு ‘இளைய தள­பதி வாழ்­க’ன்னு கோஷம் போட்­டுக்­கிட்­டி­ருந்தேன்.

அவ­ரோட சேர்ந்து நடிக்கப் போறோம்னு அப்போ நினைச்­சி­ருப்­பேனா என்ன? ‘விஜய் 60’ படத்­தோட பூஜையில் அவரை நெருக்­கமா பார்த்­தப்போ எனக்கு பேச்சே வரலை. “ரஜினி முருகன் பார்த்தேன்.

‘உம்­மேல ஒரு கண்ணு’ பாட்­டுலே கலக்கி யிருக்­கீங்­க”ன்னு சொன்­னாரு. அதுக்­கப்­பு­றம்தான் அவ­ரோடு சக­ஜமா பேசி நடிக்க முடிஞ்­சது.

பெரிய ஹீரோக்­க­ளோடு பெரிய படங்­களில் நடிக்­கி­றீங்க. இத்­தனை படம் ஒரே நேரத்தில் நடிப்­பதால் கால்ஷீட் பிரச்னை வர­லையா?
தமிழில் ஒரே நேரத்தில் நாலு பெரிய படத்தில் நடிக்­கிறேன் என்­பது உண்­மைதான்.

கதை கேட்­கு­றது, சம்­பளம் பேசு­ற­துலாம் என் மெனேஜர் பர்ஃ­பெக்டா பார்த்­துக்­க­றாரு.

ஒரு படத்­தோட இன்­னொரு படத்­துக்கு டேட்ஸ் கிளாஷ் ஆகாமே மிகவும் கவ­னமா இருக்கேன். அத­னா­லேதான் இது­வரை என் மேலே கால்ஷீட் புகார் எது­வு­மில்லை.

உங்க அம்மா உங்­க­ளுக்கு ஹெல்ப் பண்­ணு­ற­தில்­லையா?
நோ நோ. அவங்க எந்த விஷ­யத்­திலும் தலை­யி­ட­ற­தில்லை. நானாதான் எல்­லாத்­தையும் அவங்­க­கிட்டே சொல்­லிக்­கிட்டே இருப்பேன்.

ரொம்ப எக்ஸ்­பீ­ரி­யன்­ஸான நடிகை என்­பதால் சினி­மாவை அவங்க நல்லா புரிஞ்சி வெச்­சி­ருக்­காங்க.

அவங்­க­ளால எனக்கு எங்­கேயும் தர்மசங்கடம் வந்துடக்கூடாதுன்னு மிக தெளிவா இருக்காங்க. என்னோட அக்காவும் கூட பொலிவூட் சினிமாவில் பெரிய ஆளுதான். ஷாருக்கானோட ‘ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தில் வேலை பார்த்தவங்க. அவங்களும்கூட.