தனுஷுடன் ‘தொடரி’, சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’, பாபிசிம்ஹாவுடன் ‘பாம்புச்சட்டை’…இவை எல்லாவற்றையும் விட விஜய் படத்தின் அடுத்த நாயகி என்று இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷின் ஆண்டு. குஷியாக, பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷுடன் பேசியபோது,
எப்படி ஃபீல் பண்ணுறீங்க?
“இதென்ன கேள்வி? ஐ ஆம் த ஹேப்பியஸ்ட் வுமன் ஆன் எர்த். சின்ன வயசுலேயே ஹீரோயின் ஆகணுங்கிறதுதான் ஆசை, இலட்சியம் எல்லாம். அப்பா சுரேஷ்குமார், மலையாளத்தில் நிறையப் படங்கள் தயாரிச்சவர்.
அம்மா மேனகாவை உங்களுக்கே தெரியும். எண்பதுகளில் தமிழிலும் மிகவும் பிரபலமான நடிகை.
என்னோட அப்பா தயாரிச்ச ‘பைலட்ஸ்’, ‘அச்சனயானு எனிக்கு இஷ்டம்’, ‘குபேரன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிச்சேன். ஹீரோயினா என்னோட முதல் படமே மிகவும் பிரம்மாண்டமான என்ட்ரி தெரியுமா?
அப்படியா? அப்படியென்ன படம்?
ஹீரோயினா நான் நடிச்ச முதல் படத்திலேயே ரெட்டை வேடம்தான். படம் பேரு ‘கீதாஞ்சலி’. பிரியர்தர்ஷன் டைரக்ஷன். மோகன்லால் ‘மணிசித்திரத்தாள்’ படத்தில் நடிச்ச அதே கெரக்டரில் இந்தப் படத்தில் வந்து கலக்கினாரு.
2013 இல் ரிலீஸ் ஆச்சி. அகதா கிறிஸ்டியோட நாவல் இன்ஸ்பிரேஷனில் உருவான படம் அது.
நீங்க சிவகார்த்திகேயனோட ரசிகையா?
என்ன அர்த்தத்துல கேட்குறீங்கன்னு தெரியலை. நானும், சிவாவும் தமிழ் சினிமாவில் ராசியான ஜோடியாயிட்டோம். எக்சுவலா எங்கம்மாதான் சிவகார்த்திகேயனுடைய தீவிர ரசிகை.
‘ரஜினிமுருகன்’, ‘ரெமோ’ன்னு அடுத்தடுத்து அவரோட நான் நடிக்கிறது எங்கம்மாவுக்கு மிகவும் சந்தோஷம். ஷூட்டிங்கில் நான் எப்படி வேர்க் பண்ணினேன்னு கேட்குறதைவிட, “சிவா எப்படி பண்ணுறாரு? அடுத்து என்னவெல்லாம் படம் செய்யப் போறாரு?”ன்னு அவரைப் பத்தியேதான் ஆர்வத்தோட விசாரிச்சிக்கிட்டிருப்பாங்க.
விஜய்யோட நடிக்கறீங்க…
சத்தியமா இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ‘போக்கிரி’ வெற்றிவிழாவுக்காக அவரு திருவனந்தபுரம் வந்தப்போ கூட்டத்தோட கூட்டமா நின்னு ‘இளைய தளபதி வாழ்க’ன்னு கோஷம் போட்டுக்கிட்டிருந்தேன்.
அவரோட சேர்ந்து நடிக்கப் போறோம்னு அப்போ நினைச்சிருப்பேனா என்ன? ‘விஜய் 60’ படத்தோட பூஜையில் அவரை நெருக்கமா பார்த்தப்போ எனக்கு பேச்சே வரலை. “ரஜினி முருகன் பார்த்தேன்.
‘உம்மேல ஒரு கண்ணு’ பாட்டுலே கலக்கி யிருக்கீங்க”ன்னு சொன்னாரு. அதுக்கப்புறம்தான் அவரோடு சகஜமா பேசி நடிக்க முடிஞ்சது.
பெரிய ஹீரோக்களோடு பெரிய படங்களில் நடிக்கிறீங்க. இத்தனை படம் ஒரே நேரத்தில் நடிப்பதால் கால்ஷீட் பிரச்னை வரலையா?
தமிழில் ஒரே நேரத்தில் நாலு பெரிய படத்தில் நடிக்கிறேன் என்பது உண்மைதான்.
கதை கேட்குறது, சம்பளம் பேசுறதுலாம் என் மெனேஜர் பர்ஃபெக்டா பார்த்துக்கறாரு.
ஒரு படத்தோட இன்னொரு படத்துக்கு டேட்ஸ் கிளாஷ் ஆகாமே மிகவும் கவனமா இருக்கேன். அதனாலேதான் இதுவரை என் மேலே கால்ஷீட் புகார் எதுவுமில்லை.
உங்க அம்மா உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறதில்லையா?
நோ நோ. அவங்க எந்த விஷயத்திலும் தலையிடறதில்லை. நானாதான் எல்லாத்தையும் அவங்ககிட்டே சொல்லிக்கிட்டே இருப்பேன்.
ரொம்ப எக்ஸ்பீரியன்ஸான நடிகை என்பதால் சினிமாவை அவங்க நல்லா புரிஞ்சி வெச்சிருக்காங்க.
அவங்களால எனக்கு எங்கேயும் தர்மசங்கடம் வந்துடக்கூடாதுன்னு மிக தெளிவா இருக்காங்க. என்னோட அக்காவும் கூட பொலிவூட் சினிமாவில் பெரிய ஆளுதான். ஷாருக்கானோட ‘ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தில் வேலை பார்த்தவங்க. அவங்களும்கூட.






