கண்டியில் 14 வயது சிறுவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தம்பான ஆதிவாசி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரின் முறைப்பாட்டிற்கு அமைய கண்டி பொலிஸ் நிலையத்தின் மகளீர் மற்றும் சிறுவர் பணியகம் சந்தேகநபரான ஆதிவாசியை கைது செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் குறித்த ஆதிவாசிக்கும் இடையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த காலப்பகுதிக்குள் இடைகிடையே சிறுவனை அவர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.






