இலங்கை உயர்ஸ்­தா­னிகர் மீது தாக்­குதல் : மலேஷிய பொலிஸாரால் ஐவர் கைது!!

573

Attack

கோலா­லம்­பூ­ர் சர்­வதேச விமான நிலை­யத்தில் மலே­ஷி­யா­வுக்­கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்­ரா ஹிம் அன்சார் மீது தாக்­குதல் நடத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் ஐவரைக் கைது செய்துள்ளதாக அந்­நாட்டு பொலிஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

நேற்று முன்­தினம் விமான நிலை­யத்தில் பலத்த தாக்­கு­த­லுக்­குள்­ளான உயர்ஸ்­தா­னிகர் அன்சார், கோலா­லம் பூர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரும் நிலை­யி­லேயே தாக்­கு­த­லுடன் தொடர்­புடைய சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மலே­ஷிய குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­­மை அதி­காரி டத்­­தோ முஹம்மத் அத்னான் அப்துல்லாஹ் மேற்­படி சம்­பவம் தொடர்பில் ஐவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் கைத செய்­யப்­பட்ட நபர்கள் பற்­றிய மேல­திக விப­­ர­ங்­களை அவர் ஊட­கங்­க­ளுக்கு தெரிவிக்க மறுத்­து­விட்­டார்.

இதே­வேளை மேற்­படி தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் பலத்த கண்­ட­னத்­தை வெளியிட்­டுள்ள இலங்கை வெளிவிவ­கார அமைச்சு, கொழும்­பி­லுள்ள மலே­சிய உயர்ஸ்­தா­னி­கரை அழைத்து அதிருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் இச் சம்­பவம் தொடர்பில் முறை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு குற்­ற­வா­ளிகள் சட்டத்தின் முன் நிறு­த்­தப்­பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்­துள்­ளது.

நேற்­றைய தினம் கொழும்­பி­லுள்ள மலே­சிய உயர்ஸ்­தா­னி­கரை நேரில் அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள வெளிவகார அமைச்சின் செய­லாளர், விரும்­பத்­த­காத இச் சம்­பவம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் கடும் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­­­யுள்­ளார்.

மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு அங்கு சென்­றி­ருந்த அமைச்சர் தயா கம­கேவை வழி­ய­னுப்பும் பொருட்டு மலே­­சி­யா­வுக்­கான இலங்கை உயர்ஸ்­தா­னிகர் இப்­ராஹிம் அன்சார் நேற்று முன்­தினம் மாலை கோலா­லம்பூர் சர்­வ­தேச விமான நிலையத்­துக்குச் சென்ற சம­யமே அங்கு குழு­மி­யி­ருந்த ஒரு குழு­வினர் அவ­ர் மீது கடு­மை­யான தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தனர்.

இச் சம்­பவம் தொடர்­பான சி.சி.ரி.வி. காணொ­ளியும் மலே­சிய ஊட­கங்­களில் நேற்று வெளியிடப்பட்டுள்­ள­து.

மஞ்சள் நிற மேலாடை அணிந்­தி­ருக்கும் உயர்ஸ்­தா­னி­கர் அன்­சாரை துரத்தி வரும் 5க்கும் மேற்பட்டோர் அடங்­கிய குழு­வினர் அவரை வழி­ம­றித்து சர­மா­ரி­யாக தாக்­குதல் நடாத்தும் காட்சி சி.சி.ரி.வி.யில் தெளிவா­கப் பதி­வா­­கி­யுள்­ளது.

உயர்ஸ்­தா­னிகரை நோக்கி கடு­மை­யான வார்த்­தை­களைப் பிர­யோ­­கித்­த­வாறே அவ­ரது முக­த்­திலும் தலை­யிலும் ஐவர் ஒரே சம­யத்தில் தாக்­குதல் நடத்தும் காட்­சியும் மற்­றொ­ருவர் உயர்ஸ்தானிகரின் வயிற்றுப் பகு­தியில் கால்­களால் உதைக்கும் காட்­சியும் அதில் பதிவாகியுள்ளது.

அதே சமயம் அவ்­வி­டத்­துக்கு வரும் விமான நிலைய பாதுகாப்பு அதி­கா­ரி­களும் உயர்ஸ்­தா­னி­கரின் உத­வி­யா­ளர்­களும் அவரை தாக்­கு­தல்­தா­ரி­க­ளி­ட­மி­ருந்து மீட்டு அழைத்துச் செல்லும் காட்­சியும் அதில் பதி­வா­­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­­து.