வவுனியா வன்னி பட்டறை சமூக அமைப்பினரின் தொடர்பகத்தில் யுத்தத்தினால் கணவனை இழந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்க கனடாவில் வசிக்கும் நிரஞ்சனி சந்திரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
யுத்தத்தினால் கணவனை இழந்து பிள்ளைகள், வறுமமைக்கோடு காரணமாக கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்ளாதிருக்கும் மாணவர்கள் என தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழ்ஙகிவைக்கப்பட்டது.
தமிழ் விருட்சம் சமூக அமைப்பின் தலைவர் திரு.திருமதி சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், பொருளாலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்விற்கு தாலிக்குளம், மகாறம்பைக்குளம், பாரதிபுரம், வேப்பங்குளம், வீரபுரம், மதகுவைத்தகுளம் போன்ற பகுதியிலிருந்து பெற்றோருடன் மாணவர்கள் கலந்து கொண்டனர்.













