சவுதிக்குப் பணிப் பெண்ணாக சென்றவர் மீது எஜமானர்களும் முகவரும் தாக்கி சித்திரவதை செய்த அவலம்!!

525

Saudi

சவுதிக்குப் பணிப் பெண்­ணாக சென்ற ஒருவர் வீட்டு எஜ­மா­னர்­களாலும் வெளி­நாட்டு வேலைவாய்ப்பு நிறு­வன அதி­கா­ரி­யாலும் கடு­மை­யாகத் தாக்­கப்­பட்டு நோய்­வாய்ப்­பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

பின்னர் இவர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று திரும்­பி­யதன் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் நேற்று முன்­தினம் முறைப்­பாடு செய்­துள்ளார்.

உடப்­பு­சல்­லாவ லக்­கிலேண்ட் குரூப் கொண்­ட­கொல தோட்­டத்தைச் சேர்ந்த தொழி­லா­ளி­யான கந்தை­யா­கலைச் செல்வி (43) என்ற நான்கு குழந்­தை­களின் தாய்க்கே இவ் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிப்­புக்­குள்­ளான பெண் இவ்­வ­ருடம் ஜூலை 5 ஆம் திகதி சவு­திக்கு வெளி­நாட்டு முகவர் நிலையம் மூல­மாக பணிப்­பெண்­ணாக அனுப்­பப்­பட்டார்.

றியாத் வீடொன்றில் தொழி­லுக்­காக இணைந்த அன்­றைய தினமே இரவே இவர் அவ்­வீட்டு எஜமானியால் அவரின் தங்­கையின் மதினா வீட்­டுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ளார்.

அவ்­வீட்டில் தொழில்­பு­ரிந்த நிலையில் இவர் கடு­மை­யான சிறுநீர் அதி­க­போக்கு நோயினால் பெரிதும் பாதிப்­ப­டைந்­துள்ளார்.  இதே­வேளை, இவ­ருக்கு றியாதின் அடை­யாள அட்டை இல்லாமை­யினால் மருத்­து­வர்கள் சிகிச்சை வழங்க மறுத்து விட்­டனர். இதனால் இவர் மீண்டும் றியாத் வீட்­டுக்கே அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் வீட்டு எஜ­மானி இவரை வேலைக்கு வழங்­கிய வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு நிறுவனத்­துக்கு அழைத்து சென்­றுள்ளார்.

அங்­கு­வைத்து அந்­நி­று­வன அதி­காரி குறித்த பெண்ணை தாக்கி அறை ஒன்றில் அடைத்து வைத்துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பின்னர் மீண்டும் அந்தப் பெண்ணை எஜமானியிடம் இவர் ஒப்படைக்க வீட்டுக்கு அழைத்து சென்று கணவனும் மனைவியும் இவரை தாக்கி சித்திரவதை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.