மாணவிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் உடுவில் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபர்!!

666

uduvil

உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக சனீதா பற்றீசியா ஜெபரட்ணம் கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

நேற்று வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள திருச்சபை ஒன்றில் இவரது பதவிப்பிரமாணம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இப் பதவியேற்பு நடைபெற்ற போதிலும் ஏற்கனவே உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இன்று 8ம் திகதி பாடசாலை ஆரம்பமாக உள்ள நிலையில் இவ்விரு விடயங்களும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.