கடற்படை வீரர் ஒருவரின் பின்புறத்தின் இரு இடங்களில் (பிருஸ்ட பகுதி) துளையிட்டிருந்த கொங்கிறீட் கம்பிகள் இரண்டினை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை யின் மூலம் அகற்றியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கதிர்காமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்றில் இருந்து இறங்கிய குறித்த 34 வயதான கடற்படை வீரர் வீதியில் வெட்டப்பட்டிருந்த 25 அடி ஆழமான குழியொன்றில் தவறுதலாக வீழ்திருந்த நிலையில் கொங்கிறீட் இடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த கொங்கிறீட் கம்பிகள் இரண்டு அவரது தொடைப் பகுதியினை துளைத்திருந்தன.
இதனையடுத்து குறித்த கொங்கிறீட் கம்பியுடன், காயமடைந்த கடற்படை வீரர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலைக்கும் பின்னர் அங்கிருந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
அங்கு பல மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் அக்கம்பிகள் அகற்றப்பட்டிருந்தாக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.






