வவுனியாவில் சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் 2016!!

1356

 
சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தினால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதியோர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று (08.09.2016) வியாழக்கிழமை கல்லூரி முன்றலில் பாடசாலை முதல்வர் திரு சுப்பையா அமிர்தலிங்கம் தலைமையில் ‘முதியோரைப் பேனுவோம்’ நிகழ்வு நடைபெற்றது.

முதியோரின் மகத்துவம், மாணவர்கள் முதியோரைப் பேணுவதன் அவசியம், இளைய சமூகத்தினர் வளர்ச்சியில் முதியோர்கள் முக்கியத்துவம், முதியோரின் விழுமியங்கள் என்பன தொடர்பாக வவுனியா மாவட்ட சமுகசேவைகள் உத்தியோகத்தர் திரு.செ.ஸ்ரீனிவாசன் அவர்கள் மாணவர்கள் மத்தியில் விளக்கவுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பண்டாரிகுளம் முதியோர் சங்க செயலாளர் திரு.சண்முகராஜா, பொருளாளர் திரு.அருளானந்தம் மற்றும் உறுப்பினர்கள் சமூகசேவை உத்தியோகத்தர் ச.சோபனா, அபிவிருத்தி உத்தியோகத்தர், அ. தவீசன், அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

‘தலைமுறைப் பாகுபாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தல்’ எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் வடமாகாணத்தில் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களம் முதியோர் தினத்தை கொண்டாடுகிறது.

அதிபர், ஆசிரியர், மாணவர்கள் ஆர்வமாக நிகழ்வில் கலந்து கொண்டதுடன் முதியோருக்கான கௌரவத்தையும் வழங்கினர். தொடர்ந்து இந்நிகழ்வுகள் ஏனைய பாடசாலை மட்டங்களில் நடைபெறவுள்ளன.

1 14248872_1290983664259630_1418202548_n 14249002_1290983000926363_800434491_n 14249017_1290983934259603_924399450_n 14249028_1290983117593018_22713877_n 14249173_1290983344259662_702109059_n 14249257_1290983854259611_693147655_n 14287673_1290983474259649_1325217992_n 14302487_1290982924259704_1604952433_n