பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்த முடியாத இலங்கை மாணவி : இணையத்தளம் மூலம் திரட்டப்பட்ட 21 லட்சம் ரூபா நிதி!!

560

student

அவுஸ்­தி­ரே­லிய பல்­க­லைக்­க­ழ­க­மொன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவி ஒருவர், பல்கலைக்க­ழக கட்­ட­ணங்­களை செலுத்த முடி­யா­ததால் நாடு கடத்­தப்­படும் நிலையை எதிர்நோக்கி­ய­போது, அவரின் நண்பி ஒரு­வரின் ஏற்­பாட்டில் அம்­மா­ண­விக்­காக “கிர­வுட்ஃபண்ட்ஸ்” மூலம் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து சுமார் 19,000 அவுஸ்­தி­ரே­லிய டொலர் (சுமார் 21 லட்சம் ரூபா) நிதி சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

சந்­துனி சுலோச்­சனா எனும் இம்மா­ணவி அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல் பேர்ன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொரு­ளா­தாத்­ து­றையில் கல்வி கற்­கிறார். ஆனால், சந்துனி சுலோச்­ச­னாவின் பெற்­றோரால் பல்கலைக்­க­ழக கட்­ட­ணங்­களை செலுத்த முடி­யாமல் அவர் பெரும் நெருக்­க­டியை எதிர்­கொண்டார்.

பகுதி நேர­மாக சந்­துனி தொழில்­ பு­ரிந்­த­ போ­திலும் அவ­ரால்செ­ல­வு­களை சமா­ளிக்க முடியவில்லை. முந்­தைய அரை­யாண்­டுக்­கான கட்­டணம் பாக்கி மற்றும் புதிய அரை­யாண்டுக் கட்ட­ண­மாக அவர் 20,549 அவுஸ்­தி­ரே­லிய டொலர்களாக செலுத்த வேண்­டி­யி­ருந்­ததாம்.

முந்­தைய அரை­யாண்டு கட்­ட­ண­மான 4549 டொலர்­களை ஓகஸ்ட் இறு­திக்குள் செலுத்­தா­விட்டால் அவரின் விஸா ரத்துச் செய்­யப்­பட்டு அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து நாடு கடத்­தப்­படும் நிலையை எதிர்­நோக்­கி­னாராம்.

இந்­நி­லையில், சந்­துனி சுலோச்­ச­னா­வுக்­காக பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து நிதி திரட்­டு­வ­தற்கு அவரின் நெருங்­கிய நண்­பி­யான மற்­றொரு மாணவி தவீஷா ரம்­புக்­வெல முன்­வந்தார்.  இதன்­படி, பொதுமக்க­ளி­ட­மி­ருந்து நிதி சேக­ரிப்­ப­தற்கு உதவும் GoFundMe (கோஃபண்ட்மீ) எனும் இணையத்தளத்தில் சந்­தி­னிக்கு உத­வு­மாறு கோரிக்கை விடுத்தார் தவீஷா ரம்­புக்­வெல்ல.

ஆகஸ்ட் 26 ஆம் திகதி மேற்­படி இணை­யத்­த­ளத்தில் தவீஷா வெளி­யிட்ட தக­வலில், “சந்­துனி மெல்பேர்ன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது இறுதி அரை­யாண்டில் உள்­ளார். அவர் தற்­போது தொழில் புரி­கிறார்.

ஆனால் அவர் சம்­பா­திக்கும் பணம் வாட­கைக்கே செல­வா­கி­யது. அவரின் பெற்­றோரால் கட்டணங்களை செலுத்த முடி­ய­வில்லை.  கடி­ன­மான இரு வருட கல்­வியின் பின்னர் அவர் பொருளா­தார ரீதியில் மிக நெருக்­க­டியில் உள்ளார். கடந்த அரை­யாண்­டுக்­கான கட்­ட­ணத்தில் 4549 டொலர்கள் (சுமார் 516,000 ரூபா) நிலு­வை­யாக உள்ளன” எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

“இது தவிர, தற்­போ­தைய அரை­யாண்­டுக்­காக 16,000 டொலர்­களை (சுமார் 18 லட்சம் ரூபா) செலுத்த வேண்டும்.

மாத இறு­திக்குள் கடந்த அரை­யாண்டுக் கட்­டண நிலு­வையை செலுத்­தா­விட்டால் அவரின் விஸா ரத்­துச் ­செய்­யப்­பட்டு திருப்பி அனுப்பப்­படும் நிலை­லய எதிர்­நோக்­கி­யுள்ளார். செப்­டெம்பர் 7 ஆம் திக­திக்கு முன்னர் தற்­போ­தைய அரை­யாண்டின் பாதித் தொகையான 8000 டொலர்­க­ளையும் செலுத்த வேண்டும்.

எனவே, அவரின் கடன்­களை செலுத்தி அவர் பட்­ட­தா­ரி­யா­கு­வ­தற்கு உத­வுங்கள். அவர் அருமையான நபர். மிகக் கடி­ன­மாக பாடு­ப­டு­பவர்” எனவும் தவீஷா ரம்­புக்­வெல தெரி­வித்­தி­ருந்தார்.

அதை­ய­டுத்து 12 நாட்­களில் 145 பேர் மூலம் 19,069 டொலர் (சுமார் 21 லட்சம் ரூபா) நிதி சேகரிக்கப்பட்­டி­ருந்­தது. 10 டொலர்கள் முதல் 300 டொலர்கள் வரை பலர் நன்­கொடை வழங்கியிருந்­தனர்.

எவ்­வா­றெ­னினும், சில­ரிடம் சந்­துனி உதவி கோரி­ய­போ­திலும் எவரும் உதவ முன்­வ­ராத நிலை­யி­லேயே, சந்­து­னிக்­காக பொதுமக்களிடம் பணம் திரட்ட தான் நடவடிக்கை மேற்கொண்டதாக தவீஷா ரம்புக்வெல கூறியுள்ளார்.

“தமது கல்விக் கட்டணங்களை செலுத்த மக்கள் நன்கொடை வழங்கியதால் சந்துனி மிக மகிழ்ச்சியடைந்துள்ளார். தனக்காக மக்கள் ஆதரவு அளித்தமை தொடர்பில் அவர் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார் என தவீஷா ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.