மனைவியுடன் வசிப்பதைத் தவிர்த்து சிறை செல்வதற்காக வங்கியில் கொள்ளையடித்த 70 வயது நபர்!!

904

man

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனை­வி­யுடன் வீட்டில் வசிப்­ப­தற்கு விரும்­பாமல், சிறையில் தங்­கு­வ­தற்­காக வங்­கி­யொன்றில் கொள்­ளைய­டித்­துள்ளார்.

கான்சாஸ் மாநி­லத்தைச் சேர்ந்த லோரன்ஸ் ரிப்பிள் எனும் 70 வய­தான இந் ­நபர், தனது மனைவியுடன் ஏற்­பட்ட மோத­லை­ய­டுத்து, ‘இவ் ­வீட்டில் இருப்­ப­தை­விட சிறையில் இருக்­கலாம்’ எனக் கூறினார் என நீதி­மன்றில் கடந்த செவ்­வாய்க்கி­ழமை வெளிப்­ப­டுத்­தப்­பட்ட ஆவ­ணங்­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மனை­வி­யு­ட­னான மோதலின் பின், கான்சாஸ் சிட்டி வங்கிக் கிளை­யொன்­று க்குச் சென்ற லோரன்ஸ், தன்­னிடம் துப்­பாக்கி இருப்­ப­தா­கவும் தனக்குப் பணம் வழங்­கு­மாறும் எழு­தப்­பட்ட கடதாசிக் குறிப்­பொன்றை காசா­ள­ரிடம் கொடுத்தார்.

அக் ­கா­சாளர் 3,000 டொலர்­களை லோரன்­ஸிடம் கொடு­த்தார். ஆனால், பணத்தை வாங்­கிக்­கொண்டு அவர் தப்­பிச்­செல்­ல­வில்லை. மாறாக பொலிஸார் வரும்­வரை காத்­தி­ருந்தார்.

மனை­வி­யுடன் வீட்டில் வசிப்­ப­தற்கு தான் விரும்பவில்லை என பொலிஸாரி டம் லோரன்ஸ் கூறினார் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.