அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் வீட்டில் வசிப்பதற்கு விரும்பாமல், சிறையில் தங்குவதற்காக வங்கியொன்றில் கொள்ளையடித்துள்ளார்.
கான்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த லோரன்ஸ் ரிப்பிள் எனும் 70 வயதான இந் நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, ‘இவ் வீட்டில் இருப்பதைவிட சிறையில் இருக்கலாம்’ எனக் கூறினார் என நீதிமன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளிப்படுத்தப்பட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியுடனான மோதலின் பின், கான்சாஸ் சிட்டி வங்கிக் கிளையொன்று க்குச் சென்ற லோரன்ஸ், தன்னிடம் துப்பாக்கி இருப்பதாகவும் தனக்குப் பணம் வழங்குமாறும் எழுதப்பட்ட கடதாசிக் குறிப்பொன்றை காசாளரிடம் கொடுத்தார்.
அக் காசாளர் 3,000 டொலர்களை லோரன்ஸிடம் கொடுத்தார். ஆனால், பணத்தை வாங்கிக்கொண்டு அவர் தப்பிச்செல்லவில்லை. மாறாக பொலிஸார் வரும்வரை காத்திருந்தார்.
மனைவியுடன் வீட்டில் வசிப்பதற்கு தான் விரும்பவில்லை என பொலிஸாரி டம் லோரன்ஸ் கூறினார் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






