வவுனியாவில் பாராதியாரின் 95வது நினைவு தின நிகழ்வுகள்!!

536

 
வவுனியா குருமன்காடு சந்தியிலிருக்கும் மகாகவி பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு முன்னால் நேற்று(13.09.2016) காலை 9 மணியளவில் அன்னாரின் 95வது நினைவு தின நிகழ்வுகளை வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலருமான எஸ்.சந்திரகுமார் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

அன்னாரின் நினைவுரையினை வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், நிகழ்த்தியதுடன், வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய பாடசாலை அதிபர் றம்சீன் சிறப்புரையினையும் பாடசாலை மாணவர்கள் புகழுரையினையும், நிகழ்த்தியதுடன் அன்னாரின் திருவுருவச்சலைக்கு வவுனியா நகரசபை முன்னாள் உப பிதா சந்திரகுலசிங்கம், ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர் திரு.வேலுப்பிள்ளை, சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர் விக்னா, பாபு, மற்றும் சமூக சேவையாளர்கள், மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

1 dsc_0142 dsc_0144 dsc_0146 dsc_0147 dsc_0148 dsc_0149 dsc_0151 dsc_0153 dsc_0155 dsc_0156 dsc_0158 dsc_0159 dsc_0160 dsc_0161 dsc_0162 dsc_0164 dsc_0166 dsc_0169