வவுனியா விவசாயப் பண்ணையில் நேற்று(13.09.2016) காலை வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண விவசாயத்துறை, நீர்ப்பாசனத்துறை, கால்நடை, உணவு வழங்கல், அமைச்சர் பொ. ஜங்கரநேசன் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, செ.மயூரன், ஜெயதிலக, கமநல அபிவிருத்தி ஆணையாளர் திரு.விஜயகுமார், விவசாயப் பணிப்பாளர் , நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட விவசாய பயணாளிகள் 425 பேருக்கு 8.35மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.










































