8 அணிகள் இடையிலான 10வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்து வருகிறது.
இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது.
14வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணித் தலைவர் சமர் ஐஷக், பந்தை தடுக்க முயற்சித்த போது அது இந்தியாவுக்கு சுயகோலாக விழுந்தது. அதன் பிறகு கடைசி வரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணி அடுத்து வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.