கூரிய ஆயுதங்களால் தாக்கி தந்தையை கொலை செய்த 16 வயது மகன்!!

497

knif

கூரிய ஆயுதங்களால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த சந்தேகத்தில் 16 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் வந்த தந்தை, தாயை அடித்து துன்புறுத்தியதால் கோபமுற்ற மகன் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல, ருகதென்ன வத்தை பழைய பிரிவில் வசிக்கும் 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் பொழும்பில் தொழில் புரியக் கூடியவர் என்பதுடன், ஊரில் உள்ள கோவிலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கோவில் விழா நடந்து கொண்டிருக்கும் போது தந்தை தனது தாயை அடிப்பதாக சகொதரி மூலம் தெரிந்து கொண்ட மகன் வீட்டிற்கு சென்று தந்தையை கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளார்.

சந்தேகநபர் இன்று (17) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.