திரிஷா நடிப்பில் வெளியான பேய் படம் நாயகி. இது தமிழ் நாட்டில் வெளியிடப்படுவது குறித்து திரிஷா எந்தவித கருத்தும் சொல்லவில்லை. இதனால் படத்தின் முடிவு திரிஷாவுக்கு தெரிந்து விட்டது. இதனால்தான் அவர் எதுவும் சொல்லவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.
இதற்கு திரிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் ஒரு படம் பற்றி பேசாமல், அதை விளம்பரப்படுத்தாமல் இருந்தால் அதற்கு காரணம் இருக்கும். எனவே இதுபற்றி கேட்கும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் விளக்கம் அளிப்பேன். உங்கள் அன்புக்கு நன்றி என்று கூறியுள்ளார்.






