வவுனியா கனகராயன்குளம் பழைய கண்டிவீதியில் அமைத்துள்ள வயல் பகுதியில் தற்போது நெல் அறுவடை முடிவடைந்துள்ள நிலையில் வயல்களுக்கு ஒருசிலர் தீயிட்டு வருகின்றனர்.
இவ்வாறு வயல்களுக்கு தீயிடுவதால் மேச்சல் தரையின்றி கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் கால்நடைகளை மட்டுமே நம்பி வாழ்வோர் கால்நடைகளை இறைச்சிக்கு விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அல்லது கால்நடைகள் மேச்சல் இன்றி இறக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அரசாங்கம் மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை இவ் வயல்களுக்கு வியசாயிகள் பயன்படுத்துவதாகவும், இவ்வாறு வயல்களுக்கு தீவைப்பதால் நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு இயற்கை உரங்கள் இல்லாது போவதாகவும் கவலை தெரிவிக்கும் இம் மக்கள் இதனை உரியவர்கள் கவனத்திலெடுத்து இச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-தவனீ-
















