எகிப்தின் மத்திய தரைக்கடல் பகுதியில் சட்டவிரோதமாகப் பயணித்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்ததில் 42 பேர் பலியாகியுள்ளனர்.
சுமார் 163 பேரை எகிப்தின் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதுடன் 400 க்கும் அதிகமானோர் கடலில் காணாமற்போயுள்ளனர். சுமார் 600 பேருடன் குறித்த படகு பயணித்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் இத்தாலி நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
நீரில் மூழ்கிய படகினை மீனவர்கள் கண்டு, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சூடான் மற்றும் சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.






