வவுனியாவில் குளவி கொட்டி 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா – கற்பகபுரம் இரண்டாம் ஒழுங்கையிலுள்ள ஒரு வீட்டின் மாமரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்ததில், அவ்விடத்திலிருந்த வயோதிபர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
அவரைக் காப்பாற்ற அங்கிருந்தவர்கள் சென்றபோது அவர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






