நகைச்சுவை நடிகர் மீது பெண் இயக்குநர் புகார்!!

589

kanja-karuppu

நகைச்சவை நடிகர் கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குநர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சந்திரா என்ற அவர் கூறியுள்ளதாவது, நான், கள்ளன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி உள்ளேன்.

இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. என்னை பற்றியும் தவறான செய்திகளை கஞ்சா கருப்பு கூறி வருகிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நடிகர் கஞ்சா கருப்பு, சமீபத்தில் ஒரு புகார் கூறினார். அதில், தன் முன்னாள் மேலாளர் வி.கே.சுந்தரும், அவரது மனைவியும் இயக்குனருமான சந்திராவும் சேர்ந்து, நான்கு கோடி ரூபாயை ஏமாற்றி பறித்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கொடுத்துள்ளதால் விசாரணை நடத்தப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.