வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று ஞாயிற்று கிழமை (25.09.2016).”2008 O/L மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டு” பாடசாலை மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் அத்தோடு சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள் மாணவர்கள் பழையமாணவர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொணடனர். அவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் மதிய போசன விருந்து உபசாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இன் நிகழ்வின் நோக்கம் பாடசாலை வளர்ச்சி நோக்கில் மாணவர்கள் பெற்றோர்கள் சமூகத்திடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாடசாலை வளர்ச்சியில் அக்கறையுடைய ஆசிரியர்கள், அதிபர்கள், இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர்கள், ஆசிரியர் அனைவருக்கும் நன்றிகடன் செலுத்தும் நிகழ்ச்சியாகவே ஒழுங்கமைக்கபட்டது என்று நிகழ்ச்சி ஏட்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.