வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாகப் பலி!!

594

acc

வவுனியா பம்பைமடு வளாகத்திற்கு முன்பாக இன்று (26.09.2016) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெரியதம்பனையில் இருந்து வவுனியா மரக்கறிச் சந்தைக்கு வாழைக்குலையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்தவர் மீது பெரியதம்பனை நோக்கி சென்ற தனியார் பேரூந்து மோதியதிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவரை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா பெரியதம்பனை பகுதியை சேர்ந்த அம்பலவாணர் ராமச்சந்திரன் என்ற 63 வயது நபராவார் .

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.