வவுனியா புகையிரதகடவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் : பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது!!

535

 
வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை பாடசாலைக்கு அருகிலுள்ள புகையிரதக்கடவையில் கடமையில் ஊழியர்கள் இன்றி புகையிரதம் வரும்போது விபத்து இடம்பெற இருந்த சம்பவம் நேற்று மாலை 5.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புகையிரதக்கடவைக்காப்பாளர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் இவ்வேளையில் புகையிரதக்கடவைகளுக்கு பொலிசார் பாதுகாப்பளிப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நேற்று மாலை கொழும்பிலிருந்து யாழ்நோக்கி கடுகதி ரயில் சென்றபோதும் புகையிரதக் கடவையில் கடமையில் ஒருவரும் இன்றி காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.

1 image-0-02-06-503421ee5acaa4ef29c1e9b67a95b7144be881bded60a1097715e8e0fdb2aa18-v image-0-02-06-e55558b1899f387dea9f813baae9ab5572266af812a7cf6cd036e3967a2c1faa-v image-0-02-06-ee7b872f024cdedb260cdbad11f801d3d3e55081fb993ca47cec6a2c8af90250-v image-0-02-06-f47a1c8c9fce106f185f81cf0672f967478d6900b1030185e4674ad238c25175-v