மருமகனை கொலை செய்த மாமனார் கைது!!

1124

 
மாத்தறை நெலுவ அமல்வத்த தோட்டத்தில் ஒருவர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது மகளின் கணவனையே மாமனார் கத்தியால் வெட்டி கொலைசெய்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

36 வயதுடைய வடிவேலு தியாகராஜா என்ற தெனியாய பல்லேகம பிரதேசத்தை 3 பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து 48 வயதுடைய கணபதி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

1 2