வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 17.07.2016 அன்று ஆரம்பமானது.
ஞாற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெற்றுவந்த இச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (02.10.2016) மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.
இவ் இறுதி போட்டியில் சாள்ஸ் விளையாட்டுக்கழகமும் இளையதாரகை விளையாட்டுக்கு கழகமும் பலப்பரீட்சை நடத்தின. இறுதியில் இளையதாரகை அணி வெற்றிபெற்று வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.
லயன்ஸ் விளையாட்டுக்கழக உப செயலாளர் சோ.ரஜிதரன் தலைமையில் நடைபெற்ற இவ் இறுதி போட்டியில் பிரதம விருந்தினராக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினரான செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும்,
கெளரவ விருந்தினர்களாக எம்.எஸ்.செல்வராஜா(கிராம சேவகர்-பூந்தோட்டம்), திருமதி நந்தபாலன் (அதிபர்-பூந்தோட்டம் மகா வித்தியாலயம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இன் நிகழ்வின் வரவேற்புரையை லிங்கநாதன் சிவச்செலவன்(பொருளாளர் லயன்ஸ் விளையாட்டுக்கழகம்) நிகழ்த்தியதுடன், ஆசியுரையை சிவஸ்ரீ உமாசுதக் குருக்கள்(பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம்) நிகழ்த்தினார்.







































