சிறுவர் தினத்தில் பெற்ற குழந்தைகளுக்கு தந்தையால் நடந்த கொடூரம்!!

571

abuse

நாவலப்பிட்டி-இங்குருஓய பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தந்தை ஒருவர் பெற்ற பெண் பிள்ளைகள் இருவரையும் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த முதலாம் திகதி உலகமே உலக சிறுவர் தினத்தை ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் கொண்டாடி மகிழ்ந்தது.

52 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் தற்சமயம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

என்னதான் சிறுவர் தினத்தை கொண்டாடினாலும் உலகில் ஓர் மூலையில் சிறுவர்கள் மீதான வன் முறைகள் அதிகரித்துச் செல்வதை தடுக்கமுடியாதுள்ளது.