இந்திய கிரிக்கெட் வீரர் டோனி அவருடைய முன்னாள் காதலியை 2005 ஆம் ஆண்டு சந்திக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்வை சித்தரித்து வெளிவந்த படம் எம்.எஸ்.டோனி தி அண்டோல்டு ஸ்டோரி. இப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு 70 கோடிக்கும் மேலாக வசூல் சாதனை செய்து வருகிறது.
டோனியின் வாழ்வை சித்தரித்து வெளிவந்திருக்கும் அப்படத்தில் அவ்வப்போது சில இடம் பெறாத காட்சிகள், டோனியின் ரகசியங்கள் சில வெளிவருகின்றன.
அதே போல் தற்போது அப்படத்தில் ஒரு தவறு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படத்தில் ஒரு காட்சியில் டோனி தன் முன்னாள் காதலி பிரியங்கா ஜாவை விசாகபட்டினம் செல்லும் விமானத்தில் சந்தித்து பேசுவார். அச்சம்பவம் நடைபெற்றது 2005 ஆம் ஆண்டு என படத்தில் காட்டப்பட்டிருக்கும்.
ஆனால் தற்போது டோனி பிரியங்காவை சந்தித்தது 2002 ஆம் ஆண்டு எனவும் படத்தில் தவறாக 2005 ஆம் ஆண்டு என காட்டப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதே போன்று டோனி தன்னுடைய மனைவியான சாஷிக்கை முதல் முதலில் கொல்கத்தாவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் வரவேற்பாளர் பணிப்பெண்ணாக பார்த்தது போல படத்தில் இடம் பெற்றிருக்கும்.
ஆனால் டோனியும், சாஷிக்கும் சிறு வயது முதலே நண்பர்களாக பழகிவந்தவர்களாம்.






