அமைச்சரின் பெயரை கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!!

1399

arrest-1

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் மூலமாக தொழில் பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

150,000 ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பூகொடை பிரதேசத்தில் வசிக்க கூடிய 29 வயதுடைய ஒருவர் என தெரிய வந்துள்ளது. சந்தேகநபர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.