அஜித் நிவாட் காப்ராலிடம் FCID விசாரணை!!

752

img_0054-copy-jpg

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் அங்கு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனம் ஒன்றின் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளப்பட இருப்பதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கூறியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அண்மையிலும் அவர் அங்கு ஆஜராகியிருந்தார் என்பது கூறத்தக்கது.