வவுனியாவில் வீட்டுக்குள் புகுந்த முதலை!!(படங்கள்)

595

 
வவுனியா சிதம்பரபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்த முதலை ஒன்று வீட்டிற்குள் நுழைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

சிதம்பரபுரம் வன்னிக் கோட்டம் பகுதியிலுள்ள குளத்தை அண்டிய பகுதியிலுள்ள வீட்டிற்குள் குளத்திலிருந்த முதலை ஒன்று நேற்று (05.10.2016) காலை 7.30 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்தபோது அதனை அவதானித்த வீட்டின் உரிமையாளர் முதலையினை விரட்டியதுடன் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன் வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் முதலையினைப் பிடித்து கட்டி பொதுமக்கள் அற்ற காட்டுப்பகுதியில் விடுவித்துள்ளனர்.

1 image-0-02-03-2c2956338295216776cd956338ca7d0e6f832686ada90b40393452f00cf98d49-v image-0-02-03-209d99d90cfe2a30b79479651c5e1b9bca3770e615cb9ea7bb990fb07bb91a95-v media-share-0-02-03-d0f494253bb88b740e89b58844762dbf534cec8aea0aa6f3db749099e2af545f-7616a7a7-773a-4fe5-802c-77a869d61538