பெண் தொழிலதிபர் பலாத்காரம் செய்து படுகொலை : நிர்வாண உடல் மீட்பு!!

588

rape

கோவாவில் பிரபல நறுமணப் பொருள் தயாரிப்பாளர் மோனிகா குர்தே பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது நிர்வாண உடல் மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி நறுமணப் பொருள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களில் ஒருவர் மோனிகா குர்தே. 39 வயதான இவர் கோவாவின் சாங்கோல்டா கிராமத்தில் 3 படுக்கையறைகள் கொண்ட வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த யூலை மாதம் தான் புரோவோரிம் கிராமத்தில் இருந்து இங்கு இடம்மாற்றி வந்து உள்ளார். இந்த கிராமம் பிரபல சுற்றுலா தலமான காலன்குயிட் கடற்கரை அருகே உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டில் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது, அவர்கள் மோனிகாவின் கை கால்களைக் கட்டிப்போட்டு விட்டு வீட்டில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மோனிகாவின் உடல் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உடலில் இருக்கும் காயங்களை பரிசோதனை செய்த பொலிசார், அவை பாலியல் துன்புறுத்தலின் போது ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் மோனிகா பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தற்போது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்ற கோணத்தில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த பொலிசார், தங்களுக்கு முந்தைய நாள் இரவு தகவல் கிடைத்தது எனவும், அவரது உடலை நிர்வாண நிலையில் மீட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி வீடு கொள்ளையடிக்கபட்டு உள்ளது. அவரது கை மற்றும் கால்கள் படுக்கையுடன் கட்டப்பட்டு இருந்தது. தனியாக இருந்த அவர் வீட்டில் என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது என்பது தெரியவில்லை என்றனர்.

கட்டிட காவலாளியிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் மோனிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டு உள்ளது எனவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் எந்த தகவலும் கூற முடியும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.