வவுனியாவிலிருந்து மன்னார் வீதியுனூடாக பயணித்த மோட்டார் சைக்கிளுடன் குருமன்காட்டு சந்திக்கு அருகாமை அண்மிக்கும்போது வவுனியா மன்னார் பிரதான வீதிக்கு குருக்கு வீதியொன்றிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட வேளை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளிலும் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவருக்கு கால் முறிந்துள்ளதாகவும் சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவிக்கின்றனர்
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் துரித விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















