வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் மின்னொழுக்கினால் கணணிகள் சேதம்!!

257

fire

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்று (11.10.2016) மாலை ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக கணனிகள் சேதமாகியுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

நேற்று மாலை 6 மணியளவில் செட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட மின்சாரம் கூடிக்குறைதல் காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலகத்திலுள்ள கணணி மற்றும் மின்விசிறி, சில மின்குமிழ்கள் சேதமடைந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

செட்டிகுளம் பகுதியில் மின்சாரம் சீரின்மை காரணமாகவே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதை அதிகாரிகள் சீர் செய்துதருமாறும் தெரிவித்துள்ளார்.

பாரிய சேதம் இடம்பெற்றிருக்க வாய்ப்புக்கள் இருந்தும் உடனடியாக பிரதேச செயலகத்தின் காவல் கடமையிலுள்ள ஊழியர்கள் பொலிசார் மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் நிலைமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச செயலாளர் பாபா பயூன் தெரிவித்துள்ளார்.