பெற்ற மகள்களையே விற்ற தந்தை : அதிர வைக்கும் காரணம்!!

522

sale

மத்தியபிரதேச மாநிலத்தில் வறுமை காரணமாக தந்தையே பெற்ற மகள்களை 20,000 ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் பிகார் கிராமத்தைச் சேர்ந்த ராமே என்பவர் ஒரு தினக்கூலி. இவருக்கு நிலையான வேலைவாய்ப்பு இல்லாததால், கிடைக்கும் வேலையை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவரது மனைவி மரணமடைந்துள்ளார்.

இதனால் மூன்று குழந்தைகளையும் பராமரிக்க முடியாமல், ராமே கடுமையாக சிரமப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக உள்ளூரில் ஒரு குடும்பத்தினரிடம் வேலை பார்த்த ராமே, முறையே ஆறு மற்றும் 13 வயதாகும் தனது இரண்டு மகள்களையும் அங்குள்ள இருவேறு குழுக்களிடம் தலா 10,000 ரூபாய்க்காக விற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய மகனையும் தான் வேலைபார்க்கும் இடத்திலேயே விட்டுச் சென்ற ராமே, தீடீரென தலைமறைவாகிவிட்டார்.

இது குறித்து தகவலறிந்த உள்ளூர் காவல்துறையினர், தலைமறைவான ராமேவை தேடி வருகின்றனர். இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.