500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பெண்ணை ஆண் என்று கூறிய ஊழியர்!!

488

bbay

தமிழ்நாட்டில் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்ட ஊழியர் ஒருவர் ஆண் குழந்தையை பெண் குழந்தை என்று கூறியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாநகரைச் சேர்ந்தவர் கொத்தனார் பழனிக்குமார். பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரது மனைவி தேவிகாவுக்கு நேற்றுமுன்தினம் குழந்தை பிறந்தது.

அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தால் 500 பெண் எனில் 300 என லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. பழனிக்குமாருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறி மருத்துவமனை ஊழியர் முனியம்மாள் 500 வாங்கிக் கொண்டார்.



பின்னர் குழந்தையைப் பார்க்கும் ஆவலில் வார்டுக்குள் சென்று மருத்துவர்களிடம் கேட்டபோது பெண் குழந்தை பிறந்தது என்றனர்.
அதிர்ச்சியடைந்த பழனிக்குமார் தனது குழந்தையை மாற்றி விட்டதாகக் கூறி மருத்துவமனை பொலிசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து டீன் மோகன் உத்தரவில் விசாரணை நடத்தியதில் பணத்திற்கு ஆசைப்பட்டு முனியம்மாள் பொய் சொன்னது தெரிந்தது.
டிஎன்ஏ சோதனை நடத்தி உறுதி செய்தால் மட்டுமே பெண் குழந்தையை ஏற்பேன் என பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதனால் பெற்றோர் மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகளை சேகரித்து சோதனை மூலம் குழந்தை உறுதி செய்யப்பட்டது. 500 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் முனியம்மாள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.