
பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்த, கொட்டாவ பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெஹேரஹெர பிரதேச விடுதியொன்றில் பாலியல் இலஞ்சம் பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் இவரை கைதுசெய்துள்ளனர்.
முதலாம் ஆண்டுக்கு பிள்ளையை சேர்த்துக் கொள்வதற்காக தாய் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.





