ஆணையிறவு விபத்தில் இராணுவ வீரர் பலி ,15 பேர் காயம்(படங்கள்)!!

402

கண்டி நெடுஞ்சாலையில் ஆணையிறவுக்கருகில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார் 15ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆணையிறவுக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் எதிரில் வந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் நேற்று இரவு 9.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியது.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

கிளிநொச்சியில் இருந்து யாழ். நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஆனையிறவு பிரதேசத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் உழவு இயந்திரத்தை மோதி தள்ளியது.

இதனால் நிலை தடுமாறிய உழவு இயந்திரம் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது இதனால் இ.போ.ச. பஸ் தலைகீழாக தடம் புரண்டது.



இவ் விபத்து சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிர் இழந்துள்ளதுடன் பஸ்ஸில் பயணித்த 15ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அதில் 7 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1

2

3