மின்தடை மூன்றரை மணித்தியாலங்களாக அதிகரிப்பு!!

563

power

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் தினசரி மூன்றரை மணிநேரம் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி காலை 8.00 மணிமுதல் 10.30 வரையான இரண்டரை மணித்தியாலமும், மாலை 6.00 மணியில் இருந்து 10.00 மணிக்குள் ஒரு மணி நேரமும் இவ்வாறு மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

மருத்துவமனைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் விநியோகம் தடை செய்யப்படமாட்டது என மின்சார சபை தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்தி : இன்று முதல் 2 மணித்தியாலங்கள் மின்சாரத் தடை!!