திரு­மணம் செய்­வ­தாகக் கூறி காத­லியை நண்­பர்­க­ளுக்கு விருந்தாக்­கிய காத­லன்!!

983

ab

காத­லியை திரு­மணம் செய்­வ­தாக அழைத்துச் சென்று நண்­பர்­க­ளுக்கு விருந்­தாக்­கிய காதலன் மற்றும் நண்­பர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். தமி­ழ­கத்தின் கன்­னி­யா­கு­மரி மாவட்டம் குழித்­து­றை பகு­தியைச் சேர்ந்­தவர் பிரிஜித் என்ற சுரேஷ் (27).

இவர் அப் ­ப­கு­தியில் ஆட்டோ மற்றும் வேன் சார­தி­யாக பணி­பு­ரிந்து வந்­துள்ளார். இவ­ரது வேனில் நாகர்­கோ­வி­லி­லுள்ள கல்­லூ­ரியில் திக்­க­ணங்­கோடு பகு­தியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அடிக்­கடி பயணம் செய்­துள்ளார்.

இதனால், அந்த மாண­விக்கும் சுரே­ஷுக்கும் பழக்கம் ஏற்­பட்­டது. நாள­டைவில் இது காத­லாக மாறி­யது. இதற்­கி­டையில் மாண­வியை திரு­மணம் செய்து கொள்­வ­தாக சுரேஷ் ஆசை வார்த்தை கூறி­யுள்ளார்.

அதனை நம்பி மாண­வியும் வீட்டை விட்டு வெளி­யேறி சென்­றுள்ளார்.
இத­னை­ய­டுத்து இரு­வரும் பல இடங்­க­ளுக்கு சென்று சுற்றித் திரிந்­துள்­ளனர்.

அதன் பின்னர் அவர்கள் இரு­வரும் நாகர்­கோவில் சென்­ற­போது, அங்கு இரவில் தங்க இட­மில்­லா­ததால், சுரேஷின் நண்பர் தினேஷ் மற்றும் கோபால் ஆகியோர் வட­சேரி பகு­தி­யி­லுள்ள விடு­தியில் அறை எடுத்து கொடுத்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து இரு­வரும் அன்­றி­ரவு ஒன்­றாக தங்­கி­யுள்­ளனர். அடுத்­த நாள் காலையில் திரு­ம­ணத்­திற்­கான ஏற்­பா­டுகள் செய்ய வேண்­டு­மென கூறி மாண­வியின் நகை­களை வாங்­கி­யுள்ளார்.

அதனை அடகு வைத்து தாலி உள்­ளிட்ட பொருட்­களை வாங்கி வரு­கிறேன் என்று கூறி வெளியே சென்றுள்ளார் தினேஷ். இத­னை­ய­டுத்து அந்த விடு­திக்குள் அவ­ரது நண்­பர்கள் தினேஷ், கோபால் ஆகியோரும் சென்­றுள்­ளனர்.

சுரேஷின் காதலி தனி­யாக இருந்தபோது அவ­ரது நண்­பர்கள் கத்தி முனையில் மிரட்டி பாலியல் வல்லுற­வுக்­குட்­ப­டுத்­தினர். இதற்கி­டையே சுரேஷின் இன்­னொரு நண்­பரும், விடு­தியின் பக்­கத்து அறையில் தங்கி இருந்­த­வ­ரு­மான ஞான­பி­ர­வினும் சுரேஷின் காத­லியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

இந்­நி­லையில் தான் மாண­விக்கு, காத­லனே தன்னை நண்­பர்­க­ளுக்கு விருந்­தாக்­கி­யது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷின் காதலி சுரேஷ் மற்றும் அவர்­களின் நண்பர்க­ளுடன் தகராறில் ஈடு­பட்­டுள்ளார்.

இதற்­கி­டையில் கடந்த 13ஆம் திகதி முதல் இம்­மா­ணவி திடீ­ரென மாய­மா­னதை அடுத்து, அவர் காணாமல் போய்­விட்­ட­தாக மாண­வியின் பெற்­றோர்கள் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து பொலிஸார் பல இடங்­களில் மாண­வியை தேடியுள்­ளனர். ஆனால், மாண­வியை எங்கு தேடியும் கிடைக்­க­வில்லை. இந் நி­லையில் நாகர்­கோவில் வட­சேரி பகு­தி­யி­லுள்ள ஒரு விடு­தியில் இளம் பெண்ணும், சில இளை­ஞர்­களும் தக­ராறு செய்­வ­தாக வட­சேரி பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்ததைய­டுத்து பொலிஸார் அங்கு சென்று பார்த்த போதுதான் மாய­மான மாணவி இவர்தான் என தெரிய வந்­தது.

பின்னர் மாணவி அளித்த முறைப்­பாட்டின் பேரில் வேன் சாரதி சுரேஷ், அவ­ரது நண்­பர்கள் தினேஷ், கோபால் மற்றும் ஞானபிரவின் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் மாணவியின் காதலன் சுரேஷ், கோபால், தினேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.