சிரியா மீதான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காது : மன்மோகன் சிங்!!

898

manmohan

சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் ஜி20 மாநாடுகளின் கூட்டம் நடக்கிறது.

இதில் கலந்து கொண்டு பேசிய போதே, மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுத்தால் அங்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியா ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சிரியா விவகாரம் தொடர்பாக ஜி20 நாடுகளின் தலைவர்கள் இடையே ஒத்த கருத்து ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஐ.நா நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.