கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் மாயம்!!

485

fisherman

தலைமன்னார் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் காணாமல் போன மூவரும் தலை மன்னார் பகுதியைச் சேர்ந்த 22, 23 மற்றும் 25 வயதையுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இது குறித்து தலைமன்னார் கடற்படைக்கு தெரியப்படுத்தியுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.