விவாகரத்துக் கோரியுள்ள ரம்பா!!

607

ramba

நடிகை ரம்பா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகை ரம்பாவுக்கும் கனடாவைச் சேர்ந்த இந்திரனுக்கும் 2010 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.

இந்திரனின் மேஜிக்வுட் நிறுவனத்தின் தூதராக ரம்பா நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ரம்பாவுக்கும் இந்திரனுக்கும் காதல் மலர்ந்து பிறகு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் உண்டு.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுடைய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்திரனை விவாகரத்து செய்ய முடிவெடுத்த ரம்பா, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகாரத்துக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.