டெல்லியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
டெல்லி நயா பஜார் பகுதியில் இன்று காலை ஒரு கடையில் இருந்த சிலிண்டர் திடீரென்று பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதனால் பஜாரில் இருந்த மக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர்.
இந்த விபத்தில் சாலையில் இருந்த நபர் ஒருவர் பலியாகியுள்ளார். ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வெடி விபத்து அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
அந்த பகுதியில் பட்டாசுக் கடை அதிகம் இருப்பதாகவும், பட்டாசு மூட்டையை தூக்கிச் சென்றவர் தான் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






