இலங்கையின் பெண் பாலியல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 14130 பெண் பாலியல் தொழிலாளர்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், நாடு பூராகவும் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் பெண் பாலியல் தொழிலாளர்கள் 14130 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை பாலியல் தொழிலாளர்கள் 2015 ஆம் ஆண்டின்போது 630 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே பாலியல் தொழில் மூலம் பரவும் எச்.ஐ.வி. நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.