தன்னுடன் சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிடக்கோரி நடிகை ரம்பா வழக்கு!!

767

ramba

தன்னுடன் சேர்ந்து வாழுமாறு தனது கணவருக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றில் நடிகை ரம்பா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் பிறந்த நடிகை ரம்பாவின் உண்மையான பெயர் மஹாலக்ஷ்மி. தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்த பின், 1993 ஆம் ஆண்டு வெளி யான உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமா னவர் நடிகை ரம்பா.

இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை யாக விளங்கினார்.

ரம்பாவுக்கும் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் (இந்திரகுமார்) என்பவருக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 5 வயது மற்றும் 19 மாத வயதான இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது 39 வயதாகும் ரம்பாவுக்கும், 47 வயதான அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரம்பா சென்னைக்குத் திரும்பிவிட்டார்.

கணவர் இந்திரன் பத்மநாதனை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று சென்னையிலுள்ள குடும்பநல நீதிமன்றில் இந்து திருமணச்சட்டத்தின் 9 ஆவது பிரிவின் கீழ் நடிகை ரம்பா வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், ”இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் பல ஆண்டுகளுக்கு முன்பு கனடா நாட்டில் குடியேறினார்.

சிவில் பொறியியலாளரான அவர், கனடா நாட்டில் மெஜிக்வூட்ஸ் எனும் நிறுவ னத்தை நடத்தி வருகிறார். இவர் 2009 ஆம் ஆண்டு கலைப்புலி தாணு மூலம் எனக்கு அறிமுகமானார். அப் போது தன் நிறுவனத்தின் விளம்பர தூதராக என்னை இந்திரகுமார் அறிவித்தார்.

இதற்காக எனக்கு பி.எம்.டபிள்யூ. காரை அன்பளிப்பாக வழங்குவதாக அப்போது பத்திரிகைகளில் செவ்வி அளித்தார். ஆனால், அக் கார் அவரின் சகோதரர் தவக்குமார் பெயரில் தான் இதுவரை உள்ளது” என ரம்பா குறிப்பிட்டுள்ளார்.

”நாங்கள் இருவரும் காதலித்து 2010 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி சென் னையில் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், 2000 ஆம் ஆண்டு அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அவரை 2003 ஆம் ஆண்டு இந்திரகுமார் விவாகரத்து செய்தி ருந்தார்.

இதை என்னிடம் முதலில் அவர் தெரிவிக்க வில்லை. கனடா நாட்டில் நாங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு முதலில் ஆண் குழந்தை பிறக்கும் என என் கணவரின் குடும்பத்தினர் எதிர்பார்த்தனர்.

ஆனால், 2011ஆம் ஆண்டு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் என் கணவரும், அவரது குடும்பத்தினரும் அதிருப்தியடைந்தனர். பெண் குழந்தை பிறந்ததால், இந்து முறைப்படி செய்யவேண்டிய எந்த ஒரு சடங்குகளையும் அவர்கள் செய்யவில்லை.

இந்த மனவருத்தத்தை சரிசெய்ய நான் எவ்வளவோ முயற்சி செய்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அவர்கள் தினமும் என்னை கொடுமைப்படுத்தினர்.

என் கணவர் தினமும் மதுபோதையில் வந்து என்னை சித்திரவதை செய்யத் தொடங்கினார். என் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் தன் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று கேட்டார்.

இதற்கு சம்மதிக்காததால் என்னை தினமும் அடித்து உதைத்தார். இக் கொடு மையை தாங்க முடியாமல் 2012 ஆம் ஆண்டு கனேடிய பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் புகார் கொடுத்தேன்.

கனேடிய பொலிஸார் என் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். அப்போது ‘பொலிஸில் உண்மையை சொன்னால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன்.

குழந்தையையும் உன்னிடம் இருந்து பிரித்துவிடுவேன்’ என என் கணவர் என்னை மிரட்டினார். இதனால் பொலிஸாரிடம் உண்மையை சொல்லாமல் மௌனமாக இருந்துவிட்டேன்.

அதன்பின்னர் என்னை இந்தியாவுக்கு அனுப்ப என் கணவரின் குடும்பத்தினர் முயற்சித்தனர். 2012 ஆம் ஆண்டு என் மகளை இந்தியாவுக்கு நான் கடத்தி செல்ல முயற்சிப்பதாக என் மீது டொரண்டோ பொலிஸில் என் கணவர் முறைப்பாடு செய்தார்.

அதேபோல, கனடாவில் உள்ள குடும்பநல நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து என்னிடம் இருந்து என் குழந்தையை சிறிது காலம் பிரித்துவிட்டனர். பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பின்னர் என் மகளை மீட்டேன்.

பின்னர் சிறிது காலம் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். இதில் மீண்டும் நான் கர்ப்பமடைந்தேன். இந்த முறை ஆண் குழந்தை பிறக்கும் என்று மீண்டும் என் கணவர் குடும்பத்தினர் நினைத்தனர்.

ஆனால், 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எனக்கு ஷாசா என்ற 2 ஆவது பெண் குழந்தை பிறந்தது. இதனால் மீண்டும் குடும்பத்தில் பிரச்சினை தொடங்கியது.

என் கணவரின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் என்னை அசிங்கமாக பேசி கொடுமைப்படுத்தினர். என் கணவரும் மீண்டும் மதுபோதையில் வந்து என்னை கொடுமைப்படுத் தொடங்கினார்.

தற்போது நான் சென்னை வந்துவிட்டேன். என் கணவருக்கு நல்ல மனைவியாக வாழ்ந்திருக்கிறேன். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.

ஆனால், அவர் என்னை விட்டுப் பிரிவதற்குத் திட்டமிடுகிறார். எனவே, என் னுடன் சேர்ந்து வாழ என் கணவருக்கு உத்தரவிட வேண்டும்.” எனவும் அம் மனுவில் ரம்பா குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை குடும்பநல நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதன் பின் விசாரணையை டிசம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் இந்திரன் பத்மநாதன் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவி ட்டுள்ளது.