மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

297

body

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் படி சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மா மரம் ஒன்றில் குறித்த நபர் ஏறிய போது தவறுதலாக கீழே விழுந்து உயிரழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரயி வந்துள்ளது.

மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தில் பணி புரியக் கூடிய ஒருவர் அல்ல என்று தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.