வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் கேதார கௌரி விரதத்தின் இறுதிநாள் வெகு சிறப்பாக நேற்று 30.10.2016 ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
கௌரி விரதத்தின் இறுதி நாளன நேற்று அம்பாளுக்கு விசேட அபிசேகங்கள் இடம்பெற்று வசந்தமண்டப பூஜையின் பின் உள்வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
அத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கௌரி காப்பு பெற்றுக்கொண்டனர்.
படங்கள்: சுதன் சர்மா