இலங்கையில் 65 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிராமப் புறங்களைச் சேர்ந்த 10 வீதமானவர்களும், நகர்ப் புறங்களைச் சேர்ந்த 15 வீதமானவர்களும் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் புள்ளி விபரத் தகவல்களின் மூலம் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செயற்கை உணவு, துரித உணவு அதிகளவில் பயன்படுத்துவதனால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதிகமானவர்கள் எவ்வித உடற் பயிற்சிலும் மேற்கொள்வதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வாழ்க்கை முறைமை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.