நிட்டம்புவவில் பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் ஹோட்டலின் அறை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நிட்டம்புவ-உரபொல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்தே சடலம் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டவர் 62 வயதான நபர் என்றும் இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சடலத்துடன் அருகில் பூச்சி கொல்லி மருந்தும் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துளள்தாகவும் பொலிஸார் கூறினர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






